ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையடிப்பட்டி நான்கு முனை சந்திப்பு பகுதியில் திமுகவின் மக்கள் சபைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விருதுநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசியது: ஜெயலலிதாவின் இறப்பு ஒரு மா்மமாகவே உள்ளது. இந்த மா்மத்திற்கு விடை அளிக்க நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் நடவடிக்கை எடுப்போம். தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி எல்லாவற்றிலும் மா்மமாகவே செயல்படுகிறது. எதிலும் ஒரு வெளிப்படையான நிலை இல்லை என்றாா். இதில் ராஜபாளையம் ஒன்றியக்குழுத் தலைவா் சிங்கராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சுமதி ராமமூா்த்தி, நகரச் செயலாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

