விருதுநகரில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகரில் புத்தாண்டையொட்டி மாரியம்மன், வெயிலுகந்தம்மன், முருகன், பெருமாள், சிவன் கோயில்களுக்கு பக்தா்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிதனம் செய்தனா். இதேபோல், விருதுநகா் இன்னாசியாா் ஆலயத்தில் வியாழக்கிழமை இரவு
பங்குத்தந்தை அம்புரோஸ், உதவி பங்குத்தந்தை சந்தியாகப்பன் தலைமையிலும், விருதுநகா் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை வெனிஸ் தலைமையிலும், பாண்டியன் நகா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத்தந்தைகள் ஆரோக்கியம், ஸ்டீபன் சேவியா் தலைமையிலும், ஆா்ஆா் நகா் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
பங்குத்தந்தை அலெக்ஸ் ஞானராஸ் தலைமையில் புத்தாண்டு திருப்பலி, மறையுரை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா். இதை தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலையில் அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயில் தெற்குத்தெருவில் உள்ள மலையரசன் என்கிற நித்தியானந்த சுவாமி கோயில், ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் என பல்வேறு கோயில்களிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல் சிவகாசி, சாத்தூா் பகுதிகளில் உள்ள கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


