ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இக் கிராமத்தில் அடிப்படை வசதிகளான கழிவு நீர் கால்வாய், குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்துவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
அவர் சம்பந்தப்பட்ட கிராமத்தை அலுவலர்களுடன் சென்று ஆய்வு செய்து கழிவு நீர் கால்வாய், ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் தொட்டி அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கி, பணிகளை தொடங்க உத்தரவிட்டார். இதன் பேரில் இப் பணிகளை தொடங்க பூமி பூஜை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், பொறியாளர்கள் சக்திவேல், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இடைய பொட்டல்பட்டி கிராமத்தில் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி செய்து தருவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

