விருதுநகரில் இருந்து திண்டுக்கல்லுக்கு புதிய மின்பாதையில் 100 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டத்தை தென்னக ரயில்வே துறையின் பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மித்தல் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
விருதுநகருக்கும்- திண்டுக்கல்லுக்கும் இடையே 110 கி.மீ தூரம் உள்ளது. இந்த வழித்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த நிலையில், இப் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மித்தல் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் விருதுநகர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வழித் தடங்களும், ரயில் பாதையும் சரியாக உள்ளதா என அவர் பார்வையிட்டார்.
இதுகுறித்து சதீஷ்குமார் மித்தல் கூறியதாவது: தற்போது முதல் கட்டமாக ஆய்வுப் பணிகள் முடிந்து சோதனை ஓட்ட ரயில் விடப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தயாராக உள்ளன. எனவே, புதிய மின்பாதை வழித்தடப் பணிகள் அனைத்தும் திருப்தியாகவே உள்ளன. இப் பாதையில் 16 இடங்களில் சிக்னல்கள் உள்ளன. அதனால், 100 கி.மீ வேகத்தில் மின்பாதையில் ரயிலை இயக்கி ஆய்வு செய்யப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்துக்கு பின்னரே இப் பாதையில் பயணிகள் ரயில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு புதிய மின்பாதையில் ரயில் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். முதன்மை திட்ட மேலாளர் உதயகுமார், முதன்மை மின்பாதை அமைப்பு பொறியாளர் ஜே.எஸ்.பி. சிங், முதன்மை மின்பாதை விநியோக பொறியாளர் பி.வி. சந்திரமோகன், மதுரை கோட்ட மேலாளர் ஏ.கே. ரஸ்தோகி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

