சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே மரத்தில் குடும்பத் தகராறில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:23 pm

ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே மரத்தில் குடும்பத் தகராறில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

   விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் அருகே அகத்தாபட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் ராஜா (22).   இவர் திருச்செந்தூரில் கொத்தனராக வேலை செய்து வந்தார்.

    2 நாள்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். மேலும், ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் இருப்பதாக கூறி பெற்றோர் திட்டினார்களாம்.

  இதனால் மனமுடைந்த ராஜா, ராஜபாளையம் ரயில் நிலையம் முன் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜபாளையம் ரயில் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.