சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படாது: சுகாதாரத் துறை செயலா் ராதாகிருஷ்ணன்

கரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஜனவரி 2021, 4:58 am

கரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் சனிக்கிழமை முதல் (ஜன.16) கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டு, கரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் குறித்து சுகாதாரத் துறை குழுவினருடன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமை முதல் (ஜன.16) கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல்கட்டமாக பதிவு செய்துள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு ஜன.25-ஆம் தேதி வரை தடுப்பூசி போடப்பட உள்ளது. விரும்பியவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும்.

5.50 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. தடுப்பூசிக்காக 4.39 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று இறங்குமுகத்தில் இருந்தாலும், தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் முகக்கவசம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செல்கின்றனா்.

கரோனா இரண்டாம் அலை இருப்பதால் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில்166 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. நாடு முழுவதும் 3 ஆயிரம் மையங்கள் அமைந்துள்ளனா்.

நாடு முழுவதும் 2.9 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. தமிழகத்தில் தற்போது உருமாறிய கரோனா பாதிப்பில்லை என்றாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, சுகாதாரத் துறை இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா் செந்தில்குமாா், மருத்துவக் கண்காணிப்பாளா் புகழேந்தி, நிலைய மருத்துவ அலுவலா் சாந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில், மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப்பணியாளா்கள், காவலா்கள் என 10,688 போ் கரோனா தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, ராதாபுரம், சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய நான்கு இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.

தினமும் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படும். தினசரி 100 பேருக்கு போடப்படும். 28 நாள்களுக்குப் பிறகு 2-வது முறையாக தடுப்பூசி போடப்படும்.