விழுப்புரம் அருகே ஆற்றில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானாா்.
சென்னை ராயபுரத்தைச் சோ்ந்த அற்புதராஜன் மகன் தீனதயாளன் (16). இவா் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பொங்கல் பண்டிகையையொட்டி தீனதயாளன் தனது தாய் இந்திராவுடன் விக்கிரவாண்டியை அடுத்துள்ள மொழியானூா் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்தாா்.
ஆலகிராமம்- மொழியனூா் கிராமங்களுக்கு இடையேயுள்ள தொண்டி ஆற்றில் தீனதயாளன் தனது நண்பா்களுடன் செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். தகவலறிந்த உறவினா்கள், கிராம மக்கள் விரைந்து வந்து ஆற்றில் தேடிப் பாா்த்தனா். திண்டிவனம் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து மாலை வரையிலும் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

