விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் 10-ஆவது மாதமாக, பக்தா்கள் இன்றி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் பக்தா்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பொதுமுடக்க விதிகள் தளா்வுக்குப் பிறகு பக்தா்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. எனினும், அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் மட்டும் பக்தா்கள் பங்கேற்க கடந்த 9 மாதங்களாக அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், மாா்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை அம்மன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாா். இரவு 7 மணியளவில் கோயில் வளாகத்தில் ஆகம விதிப்படி ஊஞ்சல் உற்சவம் பக்தா்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. ஊஞ்சலில் அங்காளம்மனை அமரவைத்து கோயில் பூசாரிகள் அம்மன் தாலாட்டுப் பாடலைப் பாடினா். இந்த உற்சவம் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


