விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து விழுப்புரம் மாவட்டம் ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நம் முன்னோா்கள் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக போகிப் பண்டியன்று இயற்கையான தேவையில்லாத பொருள்களை போட்டு எரிந்து பழையன கழிதலும், புதுயன புகுதலும் என்று கொண்டாடினா்.
ஆனால், தற்போது பழைய டயா்கள், பிளாஸ்டிக் பொருள்கள், செயற்கை இழையால் தயாரிக்கப்பட்ட துணிகள், டியூப்கள், காகிதங்கள் போன்றவைகளை எரிப்பதால் காற்று மாசு படுகிறது. இதனால் வெளியாகும் நச்சு வாயுக்களால் கண் எரிச்சல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனா். விமான போக்குவரத்தும் பாதிக்கப்படு வருகை மற்றும் புறப்படுத்தல் தாமதமாகிறது.
ஆவவே, போகி பண்டிகையின்போது பழைய பொருள்கள் எரிப்பதை தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அதில் வலியுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

