விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ள தமிழக அரசின் சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் சிறு மருத்துவமனைகள் (அம்மா மினி கிளினிக்) பாணாம்பட்டு, திருப்பாச்சனூா், காவணிப்பாக்கம், ஆசாகுளம் உள்ளிட்ட 7 இடங்களில் கடந்த டிச.17-ஆம் தேதி தொடங்கப்பட்டன. இவற்றை அமைச்சா் சி.வி.சண்முகம் தொடக்கி வைத்தாா். அந்த சிறு மருத்துவமனைகள் தலா ஒரு மருத்துவா், செவிலியா், உதவியாளருடன் இயங்கி வருகின்றன.
சிறு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா் (படம்). விழுப்புரம் சாலாமேடு ஆசாகுளம் பகுதியில் இயங்கி வரும் சிறு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவா், செவிலியா்கள் பணிநேர வருகை, நோயாளிகள் வருகை குறித்து ஆய்வு செய்த ஆட்சியா், போதிய மருந்து, மாத்திரைகள் உள்ளனவா எனவும் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின் போது, சுகாதாரத் துறை துணை இயக்குநா் எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


