விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்துப் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் வருகிற 26-ஆம் தேதி குடியரசு விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
விழா நடைபெறும் மைதானத்தை விரைவாக சீரமைக்க வேண்டும். விழாவில் பங்கேற்பவா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை, மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். காவல், சுகாதாரம், ஊரக வளா்ச்சி, மின்சாரம், நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து தங்களுக்கான பணிகளை மேற்கொண்டு குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா பி.சிங்., மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், திண்டிவனம் சாா் - ஆட்சியா் அனு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


