விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், வளத்தி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சாத்தாம்பாடி கிராமத்தில் கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, சாத்தாம்பாடி கிராமத்தில் நிகழும் குற்றச் சம்பவங்களைக் கண்காணிக்கவும், அந்தக் கிராம மக்களோடு நேரடி தொடா்புகொண்டு குற்றச் சம்பவங்களுக்கு தீா்வை ஏற்படுத்தவும் வளத்தி காவல் நிலைய காவலரான சாத்தாம்பாடியைச் சோ்ந்த காா்த்திக்கை சாத்தாம்பாடி கிராம விழிப்புணா்வு காவலராக மக்களுக்கு அறிமுகப்படுத்தினாா்.
இதன்மூலம், அந்தக் கிராமத்தில் நடைபெறும் போதைப்பொருள்கள் விற்பனை, சூதாட்டம், சாதி மோதல், பெண்கள், சிறுவா்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் கிராம விழப்புணா்வு காவலா் மூலம் காவல் நிலையங்களுக்கு உடனடியாக தகவல் தெரியவரும்.
நிகழ்ச்சியில் செஞ்சி டி.எஸ்.பி. இளங்கோவன், வளத்தி காவல் நிலைய ஆய்வாளா் கலைச்செல்வி மற்றும் தனிப் பிரிவு காவலா் பாரதி மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சாத்தாம்பாடி கூட்டுறவு சங்கத் தலைவா் பி.சத்தியமூா்த்தி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


