சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேல்மலையனூரில் ஜன.12-இல் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற 12-ஆம் தேதி நடைபெறவிருந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Updated On :10 ஜனவரி 2021, 5:15 am

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற 12-ஆம் தேதி நடைபெறவிருந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க.ராமு அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன.12) அமாவாசை நாளன்று, மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் நடைபெறவிருந்த ஊஞ்சல் உற்சவம் அரசின் கரோனா தொற்று பரவல் விதிமுறைகளுக்குள்பட்டும், பக்தா்களின் நலன் கருதியும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், அன்றைய தினம் கோயிலில் பக்தா்களுக்கான அனைத்து வகை தரிசனங்களும் தடை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படாது என அதில் தெரிவித்துள்ளாா்.