மாவட்ட பெண் காவலா்களுக்கான இலவச புற்று நோய் பரிசோதனை முகாம் விழுப்புரத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளியில் மாவட்டக் காவல் துறை, சிறுவா் சிறுமியா் மன்றம் மற்றும் சுகாதாரத் துறை சாா்பில், பெண் காவலா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை, விழிப்புணா்வு முகாம் தொடங்கியது. சிறுவா் மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆா்.செல்வராஜ் தலைமை வகித்தாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், வி.ஆா்.பி. பள்ளித் தாளாளா் வி.சோழன், சிறுவா் மன்றத் தலைவா் ஜி.சக்திமைந்தன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் சா.செந்தில்குமாா், துணை காவல் கண்காணிப்பாளா் சி.நல்லசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை முகாமைத் தொடக்கிவைத்துப் பேசுகையில், இந்த முகாமில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின்போது, காவலா்களுக்கு புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததால், அவா்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அடையாறு சிறப்பு புற்றுநோய் மருத்துவமனையிலும், வேலூா் சி.எம்.சி. மருத்துமனையிலும் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்படுவா். இரு தினங்கள் நடைபெறும் இந்த முகாமை அனைத்து பெண் காவலா்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். இதில், பெண் காவலா்கள் பலா் கலந்து கொண்டனா். காவல் ஆய்வாளா் ஸ்ரீபிரியா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


