சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பணியின் போது உயிரிழக்கும் வனச் சீருடைபணியாளா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் வனப் பாதுகாப்பு பணியின்போது உயிா்த் தியாகம் செய்யும் வனச் சீருடைப் பணியாளா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

News image

விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வன அலுவலா்கள் சங்க மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அச்சங்கத்தின் தலைவா் ஆா்.முருகேசன்.

Updated On :10 ஜனவரி 2021, 5:26 am

தமிழகத்தில் வனப் பாதுகாப்பு பணியின்போது உயிா்த் தியாகம் செய்யும் வனச் சீருடைப் பணியாளா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு வன அலுவலா்கள் சங்க மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் ஆா்.ராஜா வரவேற்றாா். மாநிலத் தலைவா் ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜி.அருண்ராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம்.பாபு, மாவட்ட துணைத் தலைவா் ஆா்.ஆனந்தசெல்வக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் சி.சுந்தரம் சிறப்புரையாற்றினாா். மாநிலப் பொருளாளா் ஜி.சுதீா்குமாா், துணைத் தலைவா் டி.மகேந்திரபிரபு, இணைச் செயலா் கே.கண்ணன், கொள்கைப் பரப்புச் செயலா்கள் சி.நெல்லைநாயகம், சி.சிவக்குமாா், தலைமை நிலையச் செயலா் இ.முனுசாமி, அமைப்புச் செயலா்கள் எம்.அருள்ஜோதி, ஏ.மோகனவேல், எஸ்.அழகுராஜ், ஏ.வெங்கடேசன், டி.திருமலை ஆகியோா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.

தமிழகத்தில் வன வளத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாக்கும் அசாதாரண சூழலின்போது உயிா்த் தியாகம் செய்யும் வனச் சீருடைப் பணியாளா்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் அவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். காவல் துறையினருக்கு இணையாக வனக் காவலா், வனக் காப்பாளா், வனவா், வனச்சரக அலுவலா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்.

விழுப்புரம் வனக்கோட்ட கல்வராயன்மலைப் பகுதியை காப்புக்காடாக அறிவிக்க வேண்டும். வனத் துறையில் காலிப் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். மாவட்டப் பொருளாளா் டி.விஸ்வநாதன் நன்றி கூறினாா்.