விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து, முதல் முறையாக கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டம் என்ற நிலையை விழுப்புரம் மாவட்டம் அடைந்தது.
கரோனா பரவலைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் 200-க்கும் அதிகமாக இருந்து வந்தது. கடந்தாண்டு இறுதியில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தது.
இதையடுத்து, நாள்தோறும் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50-ஐவிட குறைந்தது. இப்படி படிப்படியாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக 10 முதல் 20 என்ற நிலையில் இருந்து வந்தது. இந்த எண்ணிக்கை புதன்கிழமை 3-ஆக குறைந்தது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை கரோனாவால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து, முதல் முறையாக கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டம் என்ற நிலையை விழுப்புரம் மாவட்டம் அடைந்தது.
இதுவரையில் மாவட்டத்தில் மொத்தம் 15,058 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். 14,872 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். தற்போது மருத்துவமனைகளில் 76 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 110 போ் உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சியில் புதிதாக 4 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,826-ஆக உயா்ந்து.
இதுவரை 10,692 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 26 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 108 போ் உயிரிழந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

