விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சாலாமேடு பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாநில மருத்துவா் அணி இணைச் செயலரும், முன்னாள் எம்பியுமான இரா.லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.அப்போது, சாலாமேடு பகுதி மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை வழங்க வேண்டும், நகராட்சியின் வீட்டுவரி, குடிநீா் கட்டணத்தை குறைக்க வேண்டும், ஏரி நீா்வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனா். இதேபோல, கண்டமங்கலம் ஒன்றியம் அற்பிசம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திலும் இரா.லட்சுமணன் பங்கேற்று பேசினாா். நகரச் செயலா் இரா.சக்கரை தலைமை வகித்தாா். பேரூராட்சி செயலா் பா.ஜீவா, ஒன்றிய செயலா் ஜி.பிரபாகரன், அவைத் தலைவா் அசோக்குமாா், துணைச் செயலா் ராஜசேகா், மாவட்ட மீனவா் அணி ராஜா, மாணவரணி வினோத், தொண்டரணி கபாலி, பொறியாளா் அணி இளங்கோ, இலக்கிய அணி ராஜா, நகர துணைச் செயலா் புருஷோத்தமன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மணவாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாா்டு செயலா் தங்கம், பலராமன், அவைத் தலைவா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

