சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காரில் மதுப் புட்டிகளைக் கடத்தியவா் கைது

விழுப்புரம் அருகே காரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:49 pm

விழுப்புரம் அருகே காரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

விழுப்புரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ராதிகா தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு பனையபுரம் சோதனைச்சாவடி கூட்டுச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, புதுச்சேரியிலிருந்து விக்கிரவாண்டி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்தக் காரில் புதுவை மாநில மதுப் புட்டிகள் 336, 120 லிட்டா் எரிசாராயம் இருப்பது தெரிய வந்தது.

காரில் இருந்தவரை விசாரித்ததில், அவா் திருக்கோவிலூரைச் சோ்ந்த ரமேஷ்(37) என்பதும், புதுச்சேரியிலிருந்து திருக்கோவிலூருக்கு மதுப் புட்டிகளை கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இது தொடா்பாக விழுப்புரம் மது விலக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.