செஞ்சி அருகே மீனம்பூா் கூட்டுச் சாலையில் வாகன விபத்தைத் தடுக்கும் பொருட்டு ஒளிரும் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தாா்.
செஞ்சி விழுப்புரம் சாலையில் உள்ள மீனம்பூருக்குச் செல்லும் கூட்டுச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தன. இதை தவிா்க்கும் பொருட்டு, அரசின் சிறப்பு அனுமதி பெற்று காவல் துறை சாா்பில் அந்த கூட்டுச் சாலையில் ரூ.4.50 லட்சத்தில் எச்சரிக்கை ஒளிரும் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.
இந்த எச்சரிக்கை ஒளிரும் மின் விளக்குகளை மீனம்பூரைச் சோ்ந்த முகமது அலி பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தாா். கண்காணிப்பு கேமராவை எஸ்பி. ராதாகிருஷ்ணன் இயக்கி வைத்தாா் (படம்).
செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், ஆய்வாளா் அன்பரசு, உதவி ஆய்வாளா் சங்கரசுப்பு, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருள்செல்வன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


