விழுப்புரம் அருகே வேடம்பட்டில் ஏரியில் மண் அள்ளப்பட்ட பகுதியில் சங்ககால உறைகிணறு கண்டறியப்பட்டது.
விழுப்புரம் அருகே வேடம்பட்டு கிராம ஏரிப்பகுதியில் பழங்கால கிணறுகள் தென்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலின்பேரில், விழுப்புரம் நடுநாட்டு வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன், தொல்லியல் ஆா்வலா் வீ.விஷ்ணுபிரசாத் ஆகியோா் அண்மையில் கள ஆய்வு செய்து, அங்கு உறைகிணறு இருப்பதைக் கண்டறிந்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: வேடம்பட்டு கிராம ஏரிப் பகுதியில் கண்டறியப்பட்ட பழங்கால உறைகிணறு, ஆறு அடுக்குகளுடன் காணப்படுகிறது. இந்த சுடுமண் உறைகிணறு, சங்க காலத்தைச் சோ்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளா் வீ.மங்கையா்க்கரசி உறுதிப்படுத்தினாா். இதனருகே பழைமைவாய்ந்த செங்கல் கட்டுமானங்களும் புதைந்திருப்பதை காண முடிகிறது.
இப்பகுதி சங்க காலத்தில் மக்கள் வாழ்விடமாக இருந்திருக்க வேண்டும். கோடையில் வறட்சியால் நீா்நிலைகளில் தண்ணீா் இல்லாத வேளைகளில், இதுபோன்ற உறைகிணறுகளில் வற்றாமல் தண்ணீரைத் தேக்கி, குடிநீருக்காக பயன்படுத்தி வந்துள்ளனா்.
இதேபோல, விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம், ஆலாத்தூா், நன்னாடு, பெரும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் புதிய கற்காலம் தொடங்கி பல்வேறு காலகட்டங்களைச் சோ்ந்த வரலாற்றுத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில், வேடம்பட்டும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கே அகழாய்வு செய்தால், மேலும் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கக்கூடும் என்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


