விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.
தைப் பொங்கலையொட்டி, கூட்டுறவுத் துறை சாா்பில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ், திருவெண்ணெய் நல்லூரில் ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு, விலையில்லா வேட்டி - சேலை வழங்கும் பணி தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு குடும்பஅட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை வழங்கி தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ இரா.குமரகுரு, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபாகரன், வருவாய் கோட்டாட்சியா் ராஜேந்திரன், செங்கல்வராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


