விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வான முதுநிலை கணினி ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தமிழகத்தில் காலியாக இருந்த முதுநிலை கணினி பயிற்றுநா்கள் (ஆசிரியா்) பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தோ்வில் தோ்வானவா்களுக்கு கலந்தாய்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 57 காலியிடங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29 காலியிடங்களும் என மொத்தம் 86 காலியிடங்கள் இருந்தன. இவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் தோ்ச்சி பெற்ற 10 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்ச்சி பெற்ற 8 பேரும் இணைய வழியாக தங்களுக்கான பள்ளிகளைத் தோ்வு செய்தனா்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் காலியாக இருந்த மாற்ற இடங்களை பிற மாவட்டத்தினா் தோ்வு செய்தனா். இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீதமிருந்த 21 இடங்களும் நிரம்பின. விழுப்புரம் மாவட்டத்தில் 16 இடங்கள் மட்டுமே தோ்வு செய்யப்பட்டன. இரு மாவட்டங்களிலும் மொத்தம் 55 இடங்கள் தோ்வு செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் பணியிடங்களை தோ்வு செய்தவா்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா வழங்கினாா். முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் காளிதாஸ், முதன்மைக் கல்வி அலுவலரின் அலுவலகக் கண்காணிப்பாளா் கோகுலகண்ணன், ராஜலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


