பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஒன்றியங்களில் கிளைத் தேர்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய அமைப்பாளர் இரா.இளையராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர அமைப்பாளர் நா.இராஜேஷ் வரவேற்றார்.
பால்ராம்பட்டு, கரடிசித்தூர், வேளாக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினராக
இணைந்தனர்.
கிளைத் தேர்தலில் தியாகதுருகம் பகுதிக்கு எஸ்.சி. அணியின் மாவட்டத் தலைவர் இ.சங்கரசுப்பிரமணி, கள்ளக்குறிச்சி பகுதிக்கு வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் இரா.ராஜ்பிரசன்னா ஒன்றிய தேர்தல் அதிகாரியாக செயல்பட்டனர்.
மாவட்ட அவை செயலாளர் மீனாட்சி சுந்தரம், கிருஷ்ணன், வைத்தியநாதன், பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். வி.தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

