சென்னையில் நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டுக்கு கொண்டு செல்லப்படும் கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகள் நினைவு ஜோதி, செவ்வாய்க்கிழமை விழுப்புரம் வந்தது.
இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாடு சென்னை, ராயப்பேட்டையில் வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை நடைபெறுகிறது. இம் மாநாட்டுக்காக கும்பகோணத்தில் தீ விபத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகள் நினைவாக ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த ஜோதியை கடந்த 18-ஆம் தேதி மத்தியக் குழு உறுப்பினர் கரிகாலன் தலைமையிலான குழுவினர் கும்பகோணத்தில் எடுத்துக் கொண்டு கிளம்பினர். இந்த ஜோதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி வழியாக விழுப்புரத்தை வந்தடைந்தது.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே இந்த ஜோதிக்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் குருமூர்த்தி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், இந்திய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

