ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம், அமைக்கும் முதல்வரின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோவில் வட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமுஷ்ணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, புதிய ஊராட்சி ஒன்றியம் தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து முதல் கட்ட கருத்துக்கேட்புக் கூட்டம், கடலூரில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கதிரேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் செல்வராஜ் பேசுகையில், "இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊராட்சிகள் அனைத்தும் வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு கரைகளில் அமைந்துள்ளன. இந்த கிராம மக்கள் அருகில் உள்ள நகருக்குச் சென்று வரும் வகையில் மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும்.
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபால், ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகள் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளைப் பிரித்து புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டும். இதுபோல் இந்த ஒன்றியத்தில் புதிய பேரூராட்சிகளை உருவாக்க வேண்டும்'.
விவசாய சங்கப் பிரதிநிதி கானாங்குடி வெங்கடேசன்: ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய ஊராட்சிகளை சேர்க்கும்போது இடஒதுக்கீட்டு முறையை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

