சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குடிநீர் விநியோகம் கடும் பாதிப்பு: செஞ்சி பேரூராட்சி கூட்டத்தில் புகார்

செஞ்சியில் 10 நாளைக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

Updated On :2 மே 2013, 5:49 pm

செஞ்சியில் 10 நாளைக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

செஞ்சி பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம், தலைவர் செஞ்சி மஸ்தான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயலர் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மன்றத்தின் பார்வைக்கும் பரிசீலனைக்கும் என 20 மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டன. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

அன்புச்செழியன் (திமுக): 1-வது வார்டில் குடிநீர் 10 நாளைக்கு ஒருமுறைதான் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தலைவர்: புதிய குடிநீர்த் திட்ட பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. பணிகள் முடிந்து அத்திட்டம் பேரூராட்சியிடம் ஒப்படைத்தவுடன் குடிநீர் விநியோகம் சீராகிவிடும்.

(அப்போது குடிநீர் விநியோகம் சரியில்லை என பெரும்பாலான கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.)

பன்னீர்செல்வம் (அதிமுக): 8-வது வார்டில் வளர்ச்சி பணிகள் ஏதும் நடைபெறவில்லை. 

சின்னையா வீரப்பன் (அதிமுக): 14-வது வார்டில் சாலை மற்றும் குடி நீர், கழிவு நீர் கால்வாய் சீரமைக்கப்படவில்லை.

தலைவர்: விரைவில் நடவடிக்கை எடுக்கபடும்.

சின்னையா வீரப்பன்:பொது நிதியில் இருந்து ஏன் டெண்டர் வைக்கவில்லை.

அனுசுயா (அதிமுக): 6-வது வார்டில் வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை மனு அளித்தும் பயனில்லை.

தலைவர்: டெண்டருக்கு தடை ஏற்படுத்துவது நீங்கள் (அதிமுக)தான்.

நாகராஜ் (அதிமுக): நாங்கள் தடையாக இல்லை. பிரச்சினை செய்கிறார்கள் என காரணம் காட்டி எந்த டெண்டரையுமே விடாமல் உள்ளீர்கள். இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன.

தலைவர்: பொது நிதியில் இருந்து வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் விடப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.