விழுப்புரம் அண்ணா பொறியியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம், திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லூரிகள், சென்னை அண்ணா பொறியியல் கல்லூரியின் அங்கமாக 2008-ஆம் ஆண்டு திறக்கப்பட்டன. இதில் முதலாமாண்டு சேர்ந்து படித்து முடித்த மாணவர்களுக்கு திங்கள்கிழமை மாலை விழுப்புரம் பொறியியல் கல்லூரியில் பட்டம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு அண்ணா பொறியியல் கல்லூரியின் துணை வேந்தர்(நிர்வாகம்) பி.காளிராஜ் தலைமை வகித்தார். முன்னதாக கல்லூரியின் இயக்குநர் வேலன் வரவேற்றார். அண்ணா பொறியியல் கல்லூரியின் பதிவாளர் சிவநேசன் கல்லூரியின் வளர்ச்சி குறித்து பேசினார். அவரைத் தொடர்ந்து தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் இயக்குநரும், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் வேதிப் பொறியியல் துறை பேராசிரியருமான முனைவர் எம். சிதம்பரம் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டமளித்தார்.
திண்டிவனம் கல்லூரி மாணவர்கள் 215 பேரும், விழுப்புரம் கல்லூரியிலிருந்து 219 பேரும் பட்டம் பெற்றனர். இவர்களில் விழுப்புரம், திண்டிவனம் கல்லூரிகளிலிருந்து அனைத்து துறைகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் பல்கலைக்கழக தேர்வுத்துறை அதிகாரி வெங்கடேசன் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர். விழுப்புரம் கல்லூரி முதல்வர் செந்தில் நன்றி கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

