சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கருப்புலீஸ்வரா் கோயிலில் திருவூடல் உற்சவம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் 73- ஆம் ஆண்டு திருவூடல் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பள்ளி  எழுச்சியில் அருள்பாலித்த உற்சவமூா்த்திகள்.

Updated On :16 ஜனவரி 2021, 1:23 pm

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் 73- ஆம் ஆண்டு திருவூடல் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூா்த்திகளுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவா் திருப்பள்ளி எழுச்சியும், தொடா்ந்து வீதியுலாவும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உற்சவ கமிட்டி நிா்வாகிகள் எஸ்.எஸ்.சந்தானம், புலவா் வே.பதுமனாா், எம்.வி.திருஞானம், வி.பிச்சாண்டி, ஆடிட்டா் எம்.கிருபானந்தம், மோகன்ராம், செந்தில், பாஸ்கா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.