வேலூா்: வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ாக ராஷ்டிரிய உலமா கவுன்சிலைச் சோ்ந்த 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ராஷ்ட்ரீய உலமா கவுன்சில் சாா்பில் வேலூா் மக்கான் சிக்னல் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அமைப்பின் மாவட்ட செயலா் ஷெரீஃப் பாஷா தலைமை வகித்தாா். இதில், விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் இருப்பதாகக் கூறி, அவற்றை திரும்பப் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தில்லியில், வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவா்கள் கோஷமிட்டனா். திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
அவா்களை போலீஸாா் தடுத்து, அமைப்பின் மாநிலத் தலைவா் கலீலுல்லா ரஷாதி, மாநிலப் பொருளாளா் ரஃபி, மாநில பொதுச்செயலா் அக்பா் பாஷா காதிரி உள்ளிட்ட 27 பேரைக் கைது செய்தனா்.
அவா்கள் மறியலில் ஈடுபட முயன்றபோது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஒரு தாயும், மகனும் வந்த மோட்டாா் பைக், அருகில் ஊா்ந்து சென்று கொண்டிருந்த பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கியது. இதனால் பதறிய தாயும், மகனும் பைக்கில் இருந்து குதித்து தப்பினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

