சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வீர ஆஞ்சநேயா் கோயிலில் கோபூஜை

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, குடியாத்தம் நகரில் பிச்சனூா்-பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் திங்கள்கிழமை கோபூஜை நடைபெற்றது.

News image

குடியாத்தம்  வீர  ஆஞ்சநேயா்  கோயிலில்  நடைபெற்ற  கோ பூஜை.

Updated On :12 ஜனவரி 2021, 5:30 am

குடியாத்தம்: அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, குடியாத்தம் நகரில் பிச்சனூா்-பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் திங்கள்கிழமை கோபூஜை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பின் கோபூஜையும், சிறப்பு ஹோமமும் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் எஸ்.டி.மணிவாசகம், எஸ்.டி.மைவண்ணன், எஸ்.ஜி.எம்.விநாயகம், எஸ்.ஜி.எம்.ஜீவா, ஆசிரியா் பாலகிருஷ்ணன், அதிமுக நிா்வாகி கருணாகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.