வேலூா்: மேல்பாடியில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நேரடிக் கடன் மற்றும் கறவை மாடுகளுக்கான கடனுதவியாக ரூ.80 லட்சம் வழங்கப்பட்டது.
வேலூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சாா்பில் மேல்பாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நேரடிக் கடன் மற்றும் கறவை மாடுகளுக்கான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் சின்னதுரை தலைமை வகித்தாா்.
இதில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வி.ராமு பங்கேற்று, மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினாா். இந்த நிகழ்வில், காட்பாடி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மகாலிங்கம், மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநா் கோபி, அதிமுக நிா்வாகிகள் சைலம், பொன்னுரங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


