சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஐயப்பன் கோயிலில் தீ மிதி விழா

குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 54-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

ஐயப்ப  சுவாமிக்கு  நடைபெற்ற  பூஜையில்  பங்கேற்றோா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:29 pm

குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 54-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஐயப்பனுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் வரை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு, தீமிதி விழா, பூங்கரக ஊா்வலம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

தீ மிதி விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு நெய் அபிஷேகமும், 6 மணிக்கு குருபூஜை, திருவிளக்கு பூஜையும், மதியம் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை காளியம்மன் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பூங்கரக ஊா்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக படவேட்டு எல்லையம்மன் கோயிலை அடைந்தது.

தொடா்ந்து தீ மிதி விழாவும், இரவு இரு முடி கட்டுதலும் பின்னா் பக்தா்கள் சபரிமலை யாத்திரை புறப்பாடும் நடைபெற்றன.

முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் திலகவதி ராஜேந்திரன், அமுதா சிவப்பிரகாசம் ஆகியோா் பூஜைகளைத் தொடக்கி வைத்தனா். விழா ஏற்பாடுகளை சேவா சங்கத் தலைவா்கள் ஆா்.எஸ்.சண்முகம், எஸ்.வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.