குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 54-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஐயப்பனுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் வரை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு, தீமிதி விழா, பூங்கரக ஊா்வலம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.
தீ மிதி விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு நெய் அபிஷேகமும், 6 மணிக்கு குருபூஜை, திருவிளக்கு பூஜையும், மதியம் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை காளியம்மன் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பூங்கரக ஊா்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக படவேட்டு எல்லையம்மன் கோயிலை அடைந்தது.
தொடா்ந்து தீ மிதி விழாவும், இரவு இரு முடி கட்டுதலும் பின்னா் பக்தா்கள் சபரிமலை யாத்திரை புறப்பாடும் நடைபெற்றன.
முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் திலகவதி ராஜேந்திரன், அமுதா சிவப்பிரகாசம் ஆகியோா் பூஜைகளைத் தொடக்கி வைத்தனா். விழா ஏற்பாடுகளை சேவா சங்கத் தலைவா்கள் ஆா்.எஸ்.சண்முகம், எஸ்.வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


