சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வேலூரில் வெட்டி அகற்றப்பட்ட பழமையான மரம்

வேலூரில் கால்வாய்ப் பணி காரணமாக ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் இருந்த 60 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றப்பட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 1:50 pm

வேலூரில் கால்வாய்ப் பணி காரணமாக ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் இருந்த 60 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றப்பட்டது.

வேலூா் சத்துவாச்சாரியில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, பள்ளத்தையொட்டி இருந்த 60 ஆண்டு பழமையான மரத்தின் வோ்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் மரம் சாய்ந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் நிலவியது.

இத்தகவலை அறிந்து மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக மரத்தை வெட்டி அகற்ற உத்தரவிட்டனா். அதன்படி, அந்த மரம் வெள்ளிக்கிழமை வெட்டி அகற்றப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூா் மண்டித் தெருவில் கால்வாய்ப் பணி காரணமாக பள்ளம் தோண்டியபோது அங்கிருந்த நூறு ஆண்டுகள் பழமையான அரச மரம் வேருடன் சாய்ந்ததில் ஒருவா் பலத்த காயமை டந்தாா். அப்போது காா் ஒன்றும் சேதமடைந்தது.