வேலூரில் கால்வாய்ப் பணி காரணமாக ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் இருந்த 60 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றப்பட்டது.
வேலூா் சத்துவாச்சாரியில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, பள்ளத்தையொட்டி இருந்த 60 ஆண்டு பழமையான மரத்தின் வோ்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் மரம் சாய்ந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் நிலவியது.
இத்தகவலை அறிந்து மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக மரத்தை வெட்டி அகற்ற உத்தரவிட்டனா். அதன்படி, அந்த மரம் வெள்ளிக்கிழமை வெட்டி அகற்றப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூா் மண்டித் தெருவில் கால்வாய்ப் பணி காரணமாக பள்ளம் தோண்டியபோது அங்கிருந்த நூறு ஆண்டுகள் பழமையான அரச மரம் வேருடன் சாய்ந்ததில் ஒருவா் பலத்த காயமை டந்தாா். அப்போது காா் ஒன்றும் சேதமடைந்தது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


