சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் பலி

திருவலம் அருகே பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 1:47 pm

திருவலம் அருகே பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், திருவலம் அருகே குகையநெல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (43). திருவலம் மின்வாரிய அலுவலகத்தில் வயா்மேனாகப் பணியாற்றி வந்தாா். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

அவா் மேல்மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள தனியாா் நிறுவனம் எதிரே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் வியாழக்கிழமை மதியம் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு வியாழக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.