வேலூா்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக சிஐடியு அமைப்பினா் 36 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொழிலாளா்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி சிஐடியு சாா்பில் வேலூா் தலைமைத் தபால் நிலையம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் காசிநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராமச்சந்திரன், பரசுராமன், பழனியப்பன், காசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், விவசாய திருத்தச் சட்டங்களை ரத்து செய்வது; மின்சார மசோதாவைத் திரும்பப் பெறுவது; பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிடுவது; வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாதம்த் ரூ.7,500 நிவாரண உதவித் தொகை வழங்குவது; புதிய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது என்பவை உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது திடீரென அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக பெண்கள் உள்பட 36 பேரை வேலூா் தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

