சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உதவி இயக்குநா் உள்பட நால்வா் மீது வழக்குப் பதிவு

வேலூரில் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :8 ஜனவரி 2021, 5:16 am


வேலூா்: வேலூரில் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக, உதவி இயக்குநா் உள்பட அலுவலா்கள் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் அண்ணாசாலை ஏலகிரி வளாகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையில் போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில் இருந்து கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, உதவி இயக்குநா் பரந்தாமனிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து உதவி இயக்குநா் பரந்தாமன், பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலா் மலா்மாறன், நிதி தணிக்கைப் பிரிவு கண்காணிப்பாளா் மாரிமுத்து, பள்ளிகொண்டா பேரூராட்சி பதிவு எழுத்தா் முரளி ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.