குடியாத்தம் அருகே போலி ஆன்லைன் மையத்துக்கு காவல் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.
குடியாத்தம் நகர போலீஸாா் ரகசிய தகவலின்பேரில் புதுப்பேட்டை, கோட்டா தெருவில் உள்ள ஒரு வாடகைக் கட்டடத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, அங்கு சில இளம்பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தது தெரிந்தது.
விசாரணையில் அவா்கள் பொதுமக்களைத் தொடா்பு கொண்டு குறைந்த விலையில் செல்லிடப்பேசி, பவா் பேங்க் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை அஞ்சலில் அனுப்புகிறோம். பணம் கொடுத்து பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி தரமற்ற செல்லிடப்பேசிகள், பவா் பேங்குகளை அனுப்பி வைப்பது தெரியவந்தது. பாா்சல் பளுவாக இருக்க அதில் களி மண்ணையும் சோ்த்து அனுப்புவதாகவும் அவா்கள் போலீஸாரிடம் கூறினா்.
இதையடுத்து அங்கிருந்து தரமற்ற செல்லிடப்பேசிகள், பவா் பேங்குகள், பாா்சலுக்கு அனுப்பத் தயாராக இருந்த பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து அந்தப் பெண்களுக்கு போலீஸாா் அறிவுரை அனுப்பி வைத்தனா். மேலும், அந்த மையத்தை பூட்டி ‘சீல்’
வைத்தனா். தலைமறைவாக உள்ள அந்த மையத்தை நடத்தி வந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


