விளை பயிா்களை அழிக்கும் வனவிலங்குகளைத் தடுக்க வன எல்லையில் சோலாா் மின்வேலியை அமைத்துத் தர வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினா் போ்ணாம்பட்டு பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யக் கோருவது, 60 வயதைக் கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி முதியோா் உதவித்தொகை வழங்க வேண்டுவது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுவது, புது தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் வேலூா் மேற்கு மாவட்டத் தலைவா் கே.லோகநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் என்.ரகுபதி, எஸ்.ராமதாஸ், என்.அரிமூா்த்தி, எஸ்.ராஜேந்திரன், எஸ்.உதயகுமாா், எஸ்.வி.வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


