குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 124 பேருக்கும், அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 96 பேருக்கும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, மகளிா் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எம்.கோபி தலைமை வகித்தாா். தலைமையாசிரியை ஜி.லதா வரவேற்றாா். எம்எல்ஏ ஜி.லோகநாதன் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் என்.கே.சண்முகம், கே.காளிதாசன், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் செ.கு. வெங்கடேசன், கே.வேணுகோபால், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சின்னபொன்னுசாமிநாதன், ராஜா, என்.சி.துரைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.சண்முகம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


