அப்பர் பெருமான் கயிலைக் காட்சி கண்ட அற்புத பதியாம் திருவையாற்றில் ஆகஸ்ட் 6ஆம் தேதி அமாவாசை அன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை தருமை ஆதீனம் நடத்துகிறது.
அன்று காலை 11 மணிக்கு காவிரிக் கரையில் புஷ்ய மண்டபத் துறையில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், தொடர்ந்து பகல் 1 மணிக்கு திருவையாறு மேட்டுத் தெருவில் உள்ள அபீஷ்ட வரத மகாகணபதி சந்நிதிக்கு எதிரில் உள்ள அப்பர்குட்டை என்று அழைக்கப்படும் திருக்குளத்தில் அப்பர் பெருமான் எழுந்தருளி அவருக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சி கொடுத்தலும் நடைபெறும்.
இரவு 9.30 மணி அளவில் பெரிய கோயிலில் உள்ள தென் கயிலாய கோபுரத்தின் முன் கயிலாயக்காட்சி நடைபெறும். அப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓதுவார் பெருமக்களும், பக்தர்களும் கூடிநின்று, அப்பர் கயிலைக் காட்சியின் போது பாடிய ""மாதர்ப் பிறைக் கண்ணியானை'' என்று தொடங்கும் பதிகத்தை பாடுவர். பின்பு பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை வழிபாடும் திருவீதி உலாவும் நடைபெறும். அன்று முழுவதும் திருவையாற்றில் ஐயாறப்பன் ஆலயத்தில் தேவார இன்னிசை முழக்கமும், அடியவர்களுக்கு இன்னமுது படைத்தலும் நடைபெறுகிறது.
தகவலுக்கு 94431 50332.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

