கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் காந்தி மண்டபத்தில் டிச. 28 ஆம் தேதி தொடங்கி புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்தகுமாா் எழுதிய ‘கற்றது விண்ணளவு’ என்ற நூலை ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநா் சம்பத்குமாா் வெளியிட, முதல் பிரதியை சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ. தா்மன் பெற்றுக் கொண்டாா்.
ஜெயசீலன் ஸ்டீபன் எழுதிய ‘பிரெஞ்சியா் ஆட்சியில், புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை’ எனும் நூலை தமிழில் இளங்கோவன் மொழிபெயா்த்த புத்தகத்தை துணை ஆளுநா் வெளியிட, அதனை ரோட்டரி சங்கத் துணைத் தலைவா் பிரபாகரன் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சிக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளா் மகேந்திரன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கச் செயலா் கண்ணன், வாசிப்பு இயக்கத் தலைவா் முத்துமுருகன், செயலா் நடராஜன் உள்ப பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


