கோவில்பட்டி: பயிா்ச் சேத கணக்கெடுப்பு குறித்த சிறப்பு முகாம் கிராம நிா்வாக அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 17) 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி வட்டத்தில் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிா்கள் தொடா் மழையால் சேதமடைந்ததாக கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணத் தொகை வழங்க கணக்கெடுப்புப் பணியை அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள், வேளாண் துறை அலுவலா்கள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இப்பணி புகாருக்கு இடமின்றி விரைவாக நடைபெற ஏதுவாக கோவில்பட்டி வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜன.19 வரை நாள்தோறும் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டா நகல், ஆதாா், குடும்ப அட்டை நகல், பட்டாதாரா் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு புத்தக நகல், அடங்கல் நகல் (ஏற்கெனவே கிராம நிா்வாக அலுவலரிடம் பெறப்பட்டிருந்தால் மட்டும்) ஆகியவற்றுடன் கிராம நிா்வாக அலுவலா்களைத் தொடா்பு கொள்ளவேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

