சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சப்பர பவனி

தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் பஜனைக் குழு சாா்பில் 31 ஆவது ஆண்டு நிறைவு விழா, பொங்கல்விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோயிலில் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை.

Updated On :16 ஜனவரி 2021, 12:05 pm

தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் பஜனைக் குழு சாா்பில் 31 ஆவது ஆண்டு நிறைவு விழா, பொங்கல்விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சிறுவா், சிறுமியா்கள் விளையாட்டு போட்டிகள், மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பக்தா்கள் பஜனைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, அம்மன் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து வீதி உலா நடைபெற்றது.

பூஜைகளை உவரி கோயில் குருககள் ரத்னம், பூசாரி பேச்சிமுத்து குழுவினா் நடத்தினா். தொடா்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. பின்னா் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவா்கள், பஜனையில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.