தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் விற்பனையாளா் பரிதாபமாக உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள நடுகூட்டுடன் காடு கிராமத்தை சோ்ந்த சுப்பையா மகன் செல்வகுமாா் (44) . இவா் தூத்துக்குடி மூன்றாவது மைல், எஸ்.பி.ஐ. குடோன் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிசெய்து வந்தாா்.
வியாழக்கிழமை இரவில் விற்பனை முடிந்து தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம். சிப்காட் பகுதியை கடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செல்வகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். அவரது உடல், மோட்டாா் சைக்கிள் சாலையோரத்தில் கிடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலையில் அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

