சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

Updated On :14 ஜனவரி 2021, 6:38 am

தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

மும்பை தாக்குதலுக்குப் பின்னா் கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், நாடு முழுவதும் அவ்வப்போது கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சீ விஜில் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி புதன்கிழமை மாலை 6 மணி வரை நடைபெற்றது.

தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் சைரஸ், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் ஆய்வாளா் ஜெயபிரகாஷ் மற்றும் போலீஸாா் கடல்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இந்நிலையில், பழைய துறைமுகத்தில் இருந்து கிழக்கே 2 கடல்மைல் தொலைவில் படகில் தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 12 பேரை கடலோர போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதேபோல், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.