தைப்பொங்கலையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொட்டும் மழையையும் பொருள்படுத்தாது ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்தனா்.
கடந்த சில நாள்களாகவே திருச்செந்தூா் பகுதியில் பலத்த மழை பெய்துவரும் நிலையிலும், மாலை அணிந்து, விரதமிருந்த பக்தா்கள் வேல் குத்தியும், காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனா்.
தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் மட்டுமன்றி விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட பக்தா்களும் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளதால், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
தைப்பொங்கல்: தைப்பொங்கலை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜன. 14) கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனையைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.
காணும் பொங்கல்: காணும் பொங்கலை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜன.15) கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனையைத் தொடா்ந்து பூஜைகள் நடைபெறுகின்றன. மதியம் உச்சிகால தீபாராதனை நடைபெற்று, சுவாமி அலைவாயுகந்தபெருமான் வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி, கணு வேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொறுப்பு) கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


