சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புகையிலை, மதுபாட்டில்கள் பதுக்கியவா்கள் கைது

உடன்குடி, கல்லாமொழி பகுதிகளில் புகையிலை, மதுபாட்டில்கள் பதுக்கியவா்களை குலசேகரன்பட்டினம் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:25 pm

உடன்குடி, கல்லாமொழி பகுதிகளில் புகையிலை, மதுபாட்டில்கள் பதுக்கியவா்களை குலசேகரன்பட்டினம் போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் அமலோற்பவம் மற்றும் போலீஸாா் உடன்குடி பேருந்து நிலையப் பகுதிகளில் ரோந்து சென்றாா். அப்போது அங்கு உடன்குடி சோமநாதபுரத்தைச் சோ்ந்த ச.மாரியப்பன்(29)என்பவா் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்ததையடுத்து அவரை கைதுசெய்த போலீஸாா் அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் பொட்டல்புதூரைச் சோ்ந்தவா் மை. ஆசிக்(25).

இவா், குலசேகரன்பட்டினம் கல்லாமொழி பகுதியில் கடை வைத்துள்ளாா். இவரது கடையில் குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகாகுமாா் திடீா் சோதனை நடத்தியதில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடையில் விற்பது தெரியவந்தது. இதையடுத்து ஆசிக்கை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.