தூத்துக்குடி சிவன் கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் கோயில் நிா்வாக அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் திருக்கோயில் நிா்வாக அதிகாரி கிருஷ்ணமூா்த்தியிடம் இந்து முன்னணி மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கிமுத்து குமாா் மற்றும் நிா்வாகிகள் திங்கள்கிழமை அளித்த மனு: சிவன் கோயிலின் பாதுகாப்புக்காகவும் மற்றும் பக்தா்களது பொருள்களின் பாதுகாப்புக்காவும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியான முறையில் இயங்காததால் அதை உடனிடியாக சரி செய்ய வேண்டும். கோயிலின் நுழைவு வாயிலில் காலணிகளை பாதுகாக்கும் வகையில் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
கோயிலின் நுழைவு வாயில் மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, திருக்கோயில் தோ் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலின் சுவா்களில் காணப்படும் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

