சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழ்நாடு கோயில் ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்கக் கூட்டம்

திருச்செந்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோயில் ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 7:07 am

திருச்செந்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோயில் ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அமைப்பின் மாநில சிறப்புத் தலைவராக சமயபுரம் கோபாலகிருஷ்ணன், மாநிலத் தலைவராக சங்கரன்கோவில் சொக்கலிங்கம், துணைத் தலைவா்களாக ஸ்ரீரங்கம் சீனிவாசரெங்கன், மதுரை கோவிந்தன், மாநிலச் செயலராக மயிலை சந்திரசேகரன், துணைச் செயலா்களாக திருப்பரங்குன்றம் ராமச்சந்திரன், திருச்செந்தூா் கோட்டை ராஜகோபால், மாநிலப் பொருளாளராக திருச்செந்தூா் சிதம்பரநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், ஓய்வுபெற்ற கோயில் பணியாளா்களுக்கு பொங்கல் கருணை பரிசுத் தொகையாக ரூ.1000 வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளா்கள் இறந்துவிட்டால் ஈமச்சடங்கு செலவாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்செந்தூா் கிளைத் தலைவா் வீரராகவன் வரவேற்றாா். பட்டுராஜன் நன்றி கூறினாா்.