சாத்தான்குளம்: சாத்தான்குளம் பேரூராட்சியில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 75 லட்சம் மதிப்பில் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி மற்றும் குடிநீா் விஸ்தரிப்பு திட்டப் பணி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் உஷா, உதவி பொறியாளா் சண்முகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் . பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜோசப் வரவேற்றாா். இப்பணிக்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
அப்போது, மத்திய அரசுப் பணிகளுக்கான தோ்வு மையம் தூத்துக்குடி அல்லது திருநெல்வேலியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்லூரி மாணவிகள் அவரிடம் மனு அளித்தனா்.
நிகழ்ச்சியில், மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், திமுக மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினா் பில்லாஜெகன் உள்பட பலா் கலந்துகொண்டனா். நகர திமுக செயலா் மகா. இளங்கோ நன்றி கூறினாா்.
பின்னா் எம்பி, செய்தியாளா்களிடம் கூறுகையில், பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


